என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல் அருகே முதியவர் கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்25 Nov 2019 3:52 PM GMT (Updated: 25 Nov 2019 3:52 PM GMT)
ஒகேனக்கல் அருகே குடிபோதையில் இருந்த முதியவர் கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்துள்ள கூத்தபாடி பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 55). கூலித் தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வத்திற்கு பல நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று செல்வன் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர், குடும்பத்தகராறு காரணமாக வீட்டின் அருகே உள்ள செல்லிஅம்மன் கோவிலுக்கு வந்து படுத்துள்ளார்.
இதையடுத்து கோவிலில் யாரும் இல்லாத சமயத்தில் செல்வன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X