search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதல் தோல்வியால் ஓட்டல் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

    நாங்குநேரியில் காதலி பேசுவதை தவிர்த்ததால் மனமுடைந்த ஓட்டல் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நாங்குநேரியை சேர்ந்தவர் வானுமாமலை. இவரது மகன் முத்து சங்கர் (வயது24). இவர்கள் இருவரும் அங்கு தனித்தனியாக ஓட்டல் நடத்தி வந்தனர். முத்துசங்கர் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அந்த இளம்பெண்ணுக்கும், முத்து சங்கருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    இதில் அந்த பெண், முத்து சங்கரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த முத்து சங்கர் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு, ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்து சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×