search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலாயுதம்பாளையம் சாலை விபத்தில் வாலிபர் பலி

    வேலாயுதம்பாளையத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் மூலிமங்கலம் பிரிவு வள்ளூவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 34) , இவரது மனைவி தவமணி (30) இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. பிரபு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பு ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இதுக்குறித்து வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×