search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆனைமலை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

    ஆனைமலை அருகே திருமணமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    ஆனைமலை அருகே உள்ள வேட்டைகாரன்புதூரை சேர்ந்தவர் கிரி ஆனந்த். இவரது மனைவி சங்கீதா என்கிற அங்கு லட்சுமி (வயது 20). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக சங்கீதா உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலை சரியாக வில்லை. இதன் காரணமாக சங்கீதா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் திருமணமான 6 மாதத்தில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×