search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் முழ்கி பலி
    X
    நீர் முழ்கி பலி

    மெரினா கடலில் மூழ்கி சேலம் வாலிபர் பலி

    மெரினா கடலில் மூழ்கி சேலம் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இடங்கனா சாலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நவீன் (20).

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றார்.

    மெரினா நீச்சல்குளம் அருகே நண்பர்களுடன் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தார்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கி கொண்ட நவீன் கடல் தண்ணீரில் மூழ்கினார். மற்றவர்கள் தப்பித்துக்கொண்டனர். அவர்களால் நவீனை காப்பாற்ற முடியவில்லை.

    அவர்கள் கூச்சல் போட்டதை கேட்டதும் அங்கிருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் நவீன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

    அண்ணாசதுக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல் நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேலத்தில் உள்ள நவீனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்படடது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.

    பழனிச்சாமியின் ஒரே மகன் நவீன். இவருக்கு உடன் பிறந்த சகோதரி ஒருவர். அவர்கள் நவீனின் உடலை பார்த்து கததறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    Next Story
    ×