என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெரினா கடலில் மூழ்கி சேலம் வாலிபர் பலி
சென்னை:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இடங்கனா சாலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நவீன் (20).
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றார்.
மெரினா நீச்சல்குளம் அருகே நண்பர்களுடன் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி கொண்ட நவீன் கடல் தண்ணீரில் மூழ்கினார். மற்றவர்கள் தப்பித்துக்கொண்டனர். அவர்களால் நவீனை காப்பாற்ற முடியவில்லை.
அவர்கள் கூச்சல் போட்டதை கேட்டதும் அங்கிருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் நவீன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
அண்ணாசதுக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல் நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேலத்தில் உள்ள நவீனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்படடது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.
பழனிச்சாமியின் ஒரே மகன் நவீன். இவருக்கு உடன் பிறந்த சகோதரி ஒருவர். அவர்கள் நவீனின் உடலை பார்த்து கததறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்