search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    துபாய்க்கு சென்ற மகனின் கடனை அடைக்க முடியாமல் தந்தை தற்கொலை

    பெரியகுளத்தில் துபாய் நாட்டுக்கு சென்ற மகனின் கடனை அடைக்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன். துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக அருகில் இருந்தவர்களிடம் அதிக அளவு கடன் வாங்கி சென்றார்.

    பின்னர் அந்த கடனை அடைத்து விடும்படி தனது தந்தை ஆதிநாராயணனிடம் கூறி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆதிநாராயணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அல்லிநகரம் காந்திநகரைச் சேர்ந்தவர் தவமணி (67). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் சம்பவத்தன்று க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் சுருளி (65). இவர் சம்பவத்தன்று வீட்டில் வெள்ளையடிக்கும் போது தவறி கீழே விழுந்தார். சிகிச்சையில் இருந்த அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×