search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த வானகரம் சமயபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறிய சிவகுமார் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×