search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது- அமைச்சர் செங்கோட்டையன்

    முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    மேட்டூர்:

    அமைச்சர் செங்கோட்டையன் கொளத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக பட்டய கணக்காளர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 21 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தியா முழுவதும் 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவை. ஆனால் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டய கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது. ஏரி, குளம் தூர்வாரப்பட்டதாலும், குடிமராமத்து பணிகளினாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×