search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உத்தனப்பள்ளி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    உத்தனப்பள்ளி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த அகரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா (23) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    தங்கராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று தங்கராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கவிதா வீட்டின் மாடியில் சென்று தூங்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் கணவர் மேலே வராததால் கவிதா கீழே வந்து பார்த்தபோது தங்கராஜ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த கவிதா அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கவிதா உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×