search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வீரகனூர்-தம்மம்பட்டியில் மழை

    தம்மம்பட்டி, வீரகனூர், காடையாம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக தம்மம்பட்டி, வீரகனூர், காடையாம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் பனி மூட்டமாக காட்சி அளித்த நிலையில் கடும் குளிர் வாட்டியது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வீரகனூர் 12, தம்மம்பட்டி 7.8, காடையாம்பட்டி 7.5, கெங்கவல்லி 6.4, ஏற்காடு 3, ஆனைமடுவு 2, சங்ககிரி 3.1, கரியகோவில் 2, ஓமலூர் 1.4, எடப்பாடி 1, சேலம் 0.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.7 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×