என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அனந்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் எபிசெல்வன் (வயது 50). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் நடந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அண்ணா பஸ்நிலையம் சுரங்க நடை பாதை அருகே அவர் வரும்போது மோட்டார் சைக்கிளில் 22 வயது மதிக்கத்தக வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் எபிசெல்வத்திடம் நேரம் என்னவென்று கேட்டார். அவர் தனது வாச்சை பார்த்து நேரத்தை சொல்வதற்குள் எபிசெல்வத்தின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார்.
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் எபிசெல்வத்தின் கையை தட்டி விட்டுவிட்டு செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை மேற் கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் செயின்பறிப்பு சம்பவத்தில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்