search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே கார் மோதியதில் தொழிலாளி படுகாயம்

    தஞ்சை அருகே கார் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஏழுப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஏழுப்பட்டி- தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்தார். திருக்கானூர்பட்டி நான்கு ரோடு அருகே வந்த போது எதிரே கார் மோதி படுகாயமடைந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×