என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே தொழிலாளி வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்22 Nov 2019 8:35 AM GMT (Updated: 22 Nov 2019 8:35 AM GMT)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலசோழபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் இளையராஜா (வயது35) விவசாயி கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இளையராஜாவும், திலகவதியும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று மதியம் இளையராஜா வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகையை திருடி உள்ளனர்.
இதில் ஒரு கொள்ளையன் இளையராஜா வீட்டுக்குள் இருந்து வருவதை கண்ட இளையராஜாவின் தம்பி பாபுவின் மனைவி நிரோஷா திருடியவனை பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளார். அவன் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் ஏறி தப்பி சென்று விட்டான்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இளையராஜா தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து இளையராஜா வீட்டில் பட்டப்பகலில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலசோழபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் இளையராஜா (வயது35) விவசாயி கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இளையராஜாவும், திலகவதியும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று மதியம் இளையராஜா வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகையை திருடி உள்ளனர்.
இதில் ஒரு கொள்ளையன் இளையராஜா வீட்டுக்குள் இருந்து வருவதை கண்ட இளையராஜாவின் தம்பி பாபுவின் மனைவி நிரோஷா திருடியவனை பின்தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளார். அவன் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் ஏறி தப்பி சென்று விட்டான்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இளையராஜா தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து இளையராஜா வீட்டில் பட்டப்பகலில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X