search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயகுமார்
    X
    அமைச்சர் ஜெயகுமார்

    தமிழகத்தில் 2021-ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது - ஜெயகுமார்

    தமிழகத்தில் 2021-ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2021-ல் அதிசயத்தையும், அற்புதத்தையும் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் என ரஜினி காந்த் கூறி உள்ளார். தமிழக மக்கள் அ.தி.மு.க. பக்கம் இருக்கும்வரை ரஜினி சொல்லும் அதிசயமும், அற்புதமும் நிகழாது.

    ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் அசைக்கமுடியாத மக்கள் சக்தியாக அ.தி.மு.க. உள்ளது.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் அல்ல 2021 தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.

     

    ரஜினி

    சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுபோல உள்ளாட்சியில் கவுன்சிலர்களே தலைவரை தேர்ந்தெடுப்பதால் அவர்களுக்கும், தலைவருக்கும் பிரச்சினை வராது.

    உள்ளாட்சி தேர்தல் என்றாலே தி.மு.க.வினருக்கு அலர்ஜி என்பதால் அவர்கள் இதை விரும்பாமல் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் அதிகமானோர் விருப்ப மனு அளித்து உள்ளனர். தி.மு.க.வில் விருப்ப மனு கொடுக்க ஆள் இல்லாததால் நாட்களை நீடித்து உள்ளனர்.தி.மு.க. பணத்தை நம்பி ஓட்டு கேட்பவர்கள், அ.தி.மு.க. மக்களை நம்பி ஓட்டுக் கேட்பவர்கள், அ.ம.மு.க. கட்சி சார்ஜ் இல்லாத பேட்டரியாகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×