search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுகாயம்
    X
    படுகாயம்

    வத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

    வத்தலக்குண்டுவில் டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்த ஊழியரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் தங்கமுருகன்(வயது29). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இன்று காலை இவர் பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியில் டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்ய சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வத்தலக்குன்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×