search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    பாளை.ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க சென்ற இளம்பெண் மாயம்

    நாகர்கோவிலில் இருந்து பாளை. ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவிலை அடுத்த பறக்கை வண்டிக்குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). லட்சுமணனின் முதல் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் லட்சுமணன் செல்வ பிருந்தா (23) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முதல் மனைவி தற்கொலை தொடர்பாக லட்சுமணன் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்திருந்தனர். இதன் மீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    லட்சுமணனின் முதல் மனைவி தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு கூறப்பட்டது. இதில் லட்சுமணனுக்கு கோர்ட்டு தண்டனை விதித்தது.

    இதையடுத்து லட்சுமணன் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லட்சுமணன் ஜெயிலுக்கு சென்றதால் அவரது 2-வது மனைவி செல்வ பிருந்தாவும், குழந்தைகளும் வீட்டில் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த செல்வபிருந்தா, ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க அடிக்கடி பாளை. சென்று வருவார். சம்பவத்தன்றும் இதுபோல அவர் கணவரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு பாளை. சென்றார்.

    அன்று காலையிலேயே வீட்டை விட்டு சென்ற செல்வ பிருந்தா இரவு நீண்ட நேரம் ஆனபின்னரும் வீடு திரும்பவில்லை. இது பற்றி அறிந்த செல்வ பிருந்தாவின் தாயார் பால் தங்கம் இது பற்றி உறவினர் வீடுகளில் விசாரித்தார்.

    எங்கு தேடியும் செல்வ பிருந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பால் தங்கம் சுசீந்திரம் போலீசில் செல்வ பிருந்தா மாயமானது குறித்து புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு ஜெனமே ஜெயன் மற்றும் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து மாயமான செல்வபிருந்தாவை தேடி வருகிறார்கள். கணவரை பார்க்க ஜெயிலுக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமாகி இருப்பது அவரது உறவினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×