என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021- ல் அதிமுக அரசு மலரும் என்பதே ரஜினி சொன்ன அதிசயம்- முதல்வர் பழனிசாமி பேட்டி
Byமாலை மலர்21 Nov 2019 11:28 AM GMT (Updated: 21 Nov 2019 1:01 PM GMT)
2021 ல் அதிமுக அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:
நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டார்.
கமலுடன் கூட்டணி அமைத்தால் யாருக்கு அதிகாரம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
மேலும், தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது பற்றி உங்கள் பதில், எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என தெரியவில்லை.
2021 ல் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கலாம். 2021லும் அதிமுக ஆட்சி என்பதையே அதிசயம் என்கிறார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாகக் கூறமுடியம்.
மேயர் பதவிக்கு மறைமுக தேரதல் என்பதை கொண்டு வந்ததே திமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X