search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த பட
    X
    கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த பட

    மத்திய மாநில அரசை கண்டித்து கடலூர்-விழுப்புரத்தில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்

    கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தி.மு.க.வி.னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள்சரவணன், சபா. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது மத்திய மாநில அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    விழுப்புரம்-புதுவை சாலை பழைய பஸ்நிலையம் அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அங்கையர்கண்ணி, மஸ்தான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×