என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்த ஆசிரியர் - சக ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்20 Nov 2019 11:55 AM GMT (Updated: 20 Nov 2019 11:55 AM GMT)
தேவதானப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்த சம்பவத்தில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 48). இவர் அண்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் தமிழ் ஆசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில், பொருளாதார ஆசிரியர் விஜயன் ஆகியோர் வீராசாமியை கேலி செய்துள்ளனர்.
தொடர்ந்து கேலி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வீராசாமி தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் 3 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 48). இவர் அண்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் தமிழ் ஆசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில், பொருளாதார ஆசிரியர் விஜயன் ஆகியோர் வீராசாமியை கேலி செய்துள்ளனர்.
தொடர்ந்து கேலி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வீராசாமி தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் 3 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X