search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேவதானப்பட்டி அருகே வி‌ஷம் குடித்த ஆசிரியர் - சக ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்கு

    தேவதானப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வி‌ஷம் குடித்த சம்பவத்தில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 48). இவர் அண்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் தமிழ் ஆசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில், பொருளாதார ஆசிரியர் விஜயன் ஆகியோர் வீராசாமியை கேலி செய்துள்ளனர்.

    தொடர்ந்து கேலி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வீராசாமி தனது தோட்டத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் 3 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×