என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரஜினியும்-கமலும் இணைந்தாலும் பலனில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
விருதுநகர்:
விருதுநகரில் இன்று பிளவக்கல் அணையில் பாசனத்துக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த்தும், கமலும் அரசியலில் இணைந்து செயல்பட்டாலும், அவர்களது ரசிகர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள். அதைவிட மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
எனவே ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் பலனில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது அதிசயம் என ரஜினி கூறியுள்ளார். அரசியலில் அதிசயமாக தான் தலைவர்கள் உருவாகுவார்கள்.
அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வமும் தலைவர்களாகி மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே எந்த பிளவும் இல்லை. தி.மு.க. கூட்டணியில்தான் பிளவும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்