search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராயக்கோட்டை அருகே தூக்கில் பிணமாக கிடந்த தொழிலாளி

    ராயக்கோட்டை அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த அன்னையப்பா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). தொழிலாளியான இவரது மனைவி வெங்கடலட்சுமி. 9 மாத கர்ப்பிணியான இவர் தற்போது தனது தாய்வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வெங்கடேஷ் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த வெங்கடேஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×