என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே முதியவர் மர்ம மரணம்
Byமாலை மலர்19 Nov 2019 12:09 PM GMT (Updated: 19 Nov 2019 12:09 PM GMT)
தூத்துக்குடி அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாயர்புரம்:
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). இவர் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு கோவில்களில் தர்மம் எடுத்து பிழைத்து வருவார். பின்னர் மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து சிறிது காலம் வசிப்பார்.
வழக்கம்போல் ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு கோவிலில் தர்மம் எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் சம்பவத்தன்று அவர் ஏரல் சேர்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவரது மகன் முருகன் இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் முதியவரின் மர்மச்சாவு குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X