search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    தஞ்சையில் நர்சிங் மாணவி கடத்தல்

    தஞ்சையில் நர்சிங் மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த 18 வயது பெண் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் கல்லூரி முடிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசில் அந்தப் பெண்ணின் தந்தை புகார் செய்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த சதிஷ் (வயது 20) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என்றும் அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரியும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களைத் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×