என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: 8 வயது சிறுமி பலி
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள மூனாண்டிப் பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு தர்ஷிகா (வயது 8) என்ற மகளும், கதிர் (6) என்ற மகனும் உள்ளனர் தர்ஷிகா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பும், கதிர் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் கப்பலூர் இந்திரா நகரில் உள்ள பெரியப்பா போதுராஜ் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று இரவு இருவரையும் போதுராஜின் மகன் சஞ்சய் குமார் (19) அழைத்துக் கொண்டு மூனாண்டிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
கூத்தியார்குண்டு- கப்பலூர் காலனி இடையே உள்ள 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தர்ஷிகா லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தூக்கி வீசப்பட்ட சஞ்சய், கதிர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இதேபோல் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (64). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கல்லுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
தேவன்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளின் செயின் அறுந்தது.
இதில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் சண்முகசுந்தரம் படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்