என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே காரில் வந்து சூதாடிய 8 பேர் கைது
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் கிராம எல்லையில் உள்ள மாந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
போலீசாரை கண்டதும் சூதாடிக் கொண்டிருந்த 8 பேர் தப்பி ஓட முயற்ச்சித்தனர். அவர்களை போலிசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், ரூ. 40 ஆயிரம் பணம், 52 சீட்டு கட்டுகள் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடந்தது.
கைதானவர்கள் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஷேக் முஸ்தபா, திருவள்ளூரை சேர்ந்த சுதர்சனம், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சுதர்சன், பொதட்டூரை செர்ந்த முனிசேகர்ரெட்டி, ராஜம்பேட்டையை சேர்ந்த பாஷா, ரெயில்வே கோடூரை சேர்ந்த சீனு, ரேணிகுன்டாவை சேர்ந்த நாகராஜ்), கடப்பாவை சேர்ந்த ஸ்ரீநாத் என்று தெரிய வந்தது. 8 பேரையும் ஊத்துக்கோட்டை கோர்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்