என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது
மதுரை:
மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தெப்பக்குளம் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை அந்த மாணவியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதி நின்றது.
இதில் மாணவியும் அவரது தந்தையும் கீழே விழுந்தனர். கண்ணி மைக்கும் நேரத்தில் காரில் இருந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி சென்றார். கீழே விழுந்த மாணவியின் தந்தை சுதாரித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே காரை விரட்டிச் சென்றார். தெப்பக்குளம் பகுதியில் காரை மறித்த அவர், தனது மகளை மீட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மைனர் வயதுடைய மாணவியை காரில் கடத்திச் சென்றது சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சமுத்து மகன் கமல் (27)என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்