search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது

    பிளஸ்-2 மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தெப்பக்குளம் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை அந்த மாணவியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதி நின்றது.

    இதில் மாணவியும் அவரது தந்தையும் கீழே விழுந்தனர். கண்ணி மைக்கும் நேரத்தில் காரில் இருந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி சென்றார். கீழே விழுந்த மாணவியின் தந்தை சுதாரித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே காரை விரட்டிச் சென்றார். தெப்பக்குளம் பகுதியில் காரை மறித்த அவர், தனது மகளை மீட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மைனர் வயதுடைய மாணவியை காரில் கடத்திச் சென்றது சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சமுத்து மகன் கமல் (27)என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×