என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மக்களுக்காக சிறை சென்றதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம்:
தமிழக அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி மற்றும் நடைபயணத்தை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் திருப்பரங்குன்றத்தில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சிறைக்கு சென்றது மக்களுக்காக என்று பொய் சொல்கிறார். கச்சத்தீவு, காவிரி போன்றவற்றை மீட்டு தருவதற்காக சிறை சென்றாரா?. மக்களுக்காக இதுவரை அவர் சிறை சென்றது கிடையாது என்பது உண்மையிலும் உண்மை.
முல்லை பெரியாறு, காவிரி உட்பட பல விசயங்களில் சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க. தலைவர் தன் வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். அப்படி என்றால் அவர் தோல்விதான் அடைய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. தான் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்