search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் மாயம்
    X
    பெண் மாயம்

    நெட்டப்பாக்கம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    நெட்டப்பாக்கம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீரமணி (வயது 31). கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி கீதா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் லத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    சமீப காலமாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது இருவீட்டு குடும்பத்தாரும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் காலையில் வீரமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

    பின்னர் வேலை முடிந்து மாலையில் வீரமணி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.

    உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மனைவி - குழந்தை இல்லாததால் வீரமணி தனது மனைவி மற்றும் குழந்தை மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×