என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Nov 2019 10:07 AM GMT (Updated: 16 Nov 2019 10:07 AM GMT)
பிரதமரை விமர்சித்த ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி காவலாளியே திருடன் என விமர்சித்திருந்தார்.
ரபேல் போர் விமானம் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்ததாக கூறி விமர்சித்தார்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மேலும் ராகுல்காந்தி கூறிய கருத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பா.ஜனதாவினர் நாடு முழுவதும் பிரதமரை விமர்சித்த ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என பொய் பிரசாரம் செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சாமி நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சங்கர் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர்கள் செல்வம்,ஏம்பலம் செல்வம், துரை கணேசன், மாநில செயலாளர்கள் நாகராஜ், முருகன், ஜெயந்தி, சாய் சரவணன், லட்சுமி, தேசியகுழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி காவலாளியே திருடன் என விமர்சித்திருந்தார்.
ரபேல் போர் விமானம் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்ததாக கூறி விமர்சித்தார்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மேலும் ராகுல்காந்தி கூறிய கருத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பா.ஜனதாவினர் நாடு முழுவதும் பிரதமரை விமர்சித்த ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என பொய் பிரசாரம் செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சாமி நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சங்கர் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர்கள் செல்வம்,ஏம்பலம் செல்வம், துரை கணேசன், மாநில செயலாளர்கள் நாகராஜ், முருகன், ஜெயந்தி, சாய் சரவணன், லட்சுமி, தேசியகுழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X