என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்15 Nov 2019 11:22 PM GMT (Updated: 16 Nov 2019 9:27 AM GMT)
காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இது தொடக்கத்தில் பரவலாக பெய்ததால் இயல்பை விடவும் மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில், கடந்த ஆண்டை போலவே மந்த கதியை அடைந்தது. மேலும் கோடை காலத்தை போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலும் சில நாட்கள் சுட்டெரித்தது.
இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பதிவாகிய மழை அளவு வருமாறு:-
திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் தலா 13 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதைப்போல சூலூரில் 8 செ.மீ., சோளிங்கர், சாத்தான்குளம், கோவை தெற்கில் தலா 5 செ.மீ., பேராவூரணி, பீளமேடு, பெனுகொண்டபுரத்தில் தலா 4 செ.மீ., ஆர்.கே.பேட்டை, கொடுமுடி, பெரியகுளம், நெய்வேலி, வந்தவாசி, மாமல்லபுரம், பொள்ளாச்சி, உத்திரமேரூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் கொடைக்கானல், மயிலாடுதுறை, பெருங்களூர், அரூர், திருத்தணி, திருப்பூர், காவேரிப்பாக்கம், கரம்பக்குடியில் தலா 2 செ.மீ., நிலக்கோட்டை, ஆலங்குடி, சோழவரம், குடியாத்தம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேதாரண்யம், மரக்காணம், காங்கேயம், சிவகங்கையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இது தொடக்கத்தில் பரவலாக பெய்ததால் இயல்பை விடவும் மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில், கடந்த ஆண்டை போலவே மந்த கதியை அடைந்தது. மேலும் கோடை காலத்தை போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலும் சில நாட்கள் சுட்டெரித்தது.
இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பதிவாகிய மழை அளவு வருமாறு:-
திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் தலா 13 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதைப்போல சூலூரில் 8 செ.மீ., சோளிங்கர், சாத்தான்குளம், கோவை தெற்கில் தலா 5 செ.மீ., பேராவூரணி, பீளமேடு, பெனுகொண்டபுரத்தில் தலா 4 செ.மீ., ஆர்.கே.பேட்டை, கொடுமுடி, பெரியகுளம், நெய்வேலி, வந்தவாசி, மாமல்லபுரம், பொள்ளாச்சி, உத்திரமேரூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் கொடைக்கானல், மயிலாடுதுறை, பெருங்களூர், அரூர், திருத்தணி, திருப்பூர், காவேரிப்பாக்கம், கரம்பக்குடியில் தலா 2 செ.மீ., நிலக்கோட்டை, ஆலங்குடி, சோழவரம், குடியாத்தம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேதாரண்யம், மரக்காணம், காங்கேயம், சிவகங்கையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X