என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூட்கேசின் கைப்பிடிக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியது
Byமாலை மலர்15 Nov 2019 5:44 PM GMT (Updated: 15 Nov 2019 5:44 PM GMT)
மதுரை விமான நிலையத்தில் சூட்கேசின் கைப்பிடிக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 1.1 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மதுரை:
சிங்கப்பூரில் இருந்து நேற்று மதுரை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்த வந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, பயணி ஒருவர் தனது சூட்கேசை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணி கொண்டுவந்த பொருட்டகளை சோதனை நடத்தினர். அப்போது அந்த பயணி தான் கொண்டுவந்த சூட்கேசின் கைப்பிடிக்குள் ரூ. 42 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சட்ட விரோதமாக தங்கத்தை கடத்திய நபரை கைது செய்த சுங்க அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X