search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிண்டி-வேளச்சேரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது

    கிண்டி-வேளச்சேரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டி, வேளச்சேரி பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    குற்றவாளிகளை பிடிக்க அடையாறு துணை கமி‌ஷனர் பகலவன் மேற்பார்வையில் கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்ராயன், வேளச்சேரி, இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் துப்பு துலக்கினர். இதில் கரூரை சேர்ந்த ராஜா, உத்திரமேரூர் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்டு பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இவர்களிடம் இருந்து 80 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கி இருந்து 2 பேரும் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.

    Next Story
    ×