என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக அரசு பேனர் வைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
Byமாலை மலர்15 Nov 2019 7:23 AM GMT (Updated: 15 Nov 2019 7:23 AM GMT)
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
அரசு நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்க அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பேனர் வைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், சீன அதிபர் வந்தபோது அரசு சார்பில் பேனர் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே அரசு சார்பிலும் தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், டிராபிக் ராமசாமியின் வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், சீன அதிபர் இந்தியாவிற்கு வந்து சென்றுவிட்டார், இனி இந்த வழக்கில் என்ன உள்ளது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயர்நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X