என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசுக்கு எண்ணம் இல்லை -மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்15 Nov 2019 6:13 AM GMT (Updated: 15 Nov 2019 6:16 AM GMT)
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில்அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்றுதான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை அல்ல.
ஆனால், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் அதிமுக கவனமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் திட்டமிட்டு தொடர்ந்து பொய் கூறுகின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு தான் செயல்படுகிறது.
பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைமுறை என்ன? என்பதை விளக்க வேண்டும். எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும், சந்திக்க திமுக தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X