என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தூர் அருகே நிலத்தகராறில் அண்ணியை தாக்கிய கொழுந்தன் கைது
Byமாலை மலர்14 Nov 2019 4:06 PM GMT (Updated: 14 Nov 2019 4:06 PM GMT)
மத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக அண்ணியை தாக்கிய கொழுந்தனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 40). வேல்முருகனின் தம்பி அமல்ராஜ் என்கிற ராஜா (40). இவரது மனைவி பாரதி (23). வேல்முருகனுக்கும், அவரது தம்பி அமல்ராஜ்சிக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வேல்முருகனுக்கும், அமல்ராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகிய 2 பேரும் சேர்ந்து வேல்முருகனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த லட்சுமியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் சேர்ந்து திடீரென்று லட்சுமியை சரமாரியாக தாக்கினர். இதில் லட்சுமி காயமடைந்தார்.
இதுகுறித்து லட்சுமி மத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் அமல்ராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அமல்ராஜை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X