search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மத்தூர் அருகே நிலத்தகராறில் அண்ணியை தாக்கிய கொழுந்தன் கைது

    மத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக அண்ணியை தாக்கிய கொழுந்தனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 40). வேல்முருகனின் தம்பி அமல்ராஜ் என்கிற ராஜா (40). இவரது மனைவி பாரதி (23). வேல்முருகனுக்கும், அவரது தம்பி அமல்ராஜ்சிக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் நேற்று மீண்டும் வேல்முருகனுக்கும், அமல்ராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகிய 2 பேரும் சேர்ந்து வேல்முருகனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த லட்சுமியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் சேர்ந்து திடீரென்று லட்சுமியை சரமாரியாக தாக்கினர். இதில் லட்சுமி காயமடைந்தார். 

    இதுகுறித்து லட்சுமி மத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் அமல்ராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அமல்ராஜை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×