என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
Byமாலை மலர்14 Nov 2019 3:50 PM GMT (Updated: 14 Nov 2019 3:50 PM GMT)
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து பெரியம்பட்டி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் பேளாரஹள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது மினிலாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேளாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த காவேரி மகன் கூலித்தொழிலாளியான ராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற நண்பர் கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 60) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தருமபுரி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X