search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலை தேனீக்கள்
    X
    மலை தேனீக்கள்

    கொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி

    கொடைக்கானலில் நடந்து சென்ற பெண்ணை மலை தேனீக்கள் கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதி பூண்டி கிராமம், கிளாவரை கிராமத்தை ஒட்டிய அக்கறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி (வயது 75).

    இவர் தனது மகன் ராஜேந்திரன் உடன் வசித்து வந்தார். கடந்த 12-ந் தேதி மீனாட்சி தேனியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றுள்ளார்.

    அப்போது கரூர் கம்பெனி மேடு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மலைத் தேனீக்கள் மீனாட்சியை உடல் முழுவதும் கொட்டி உள்ளது. இதனால் மீனாட்சி அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் மீனாட்சியை முதலுதவி சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×