என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதி பூண்டி கிராமம், கிளாவரை கிராமத்தை ஒட்டிய அக்கறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி (வயது 75).
இவர் தனது மகன் ராஜேந்திரன் உடன் வசித்து வந்தார். கடந்த 12-ந் தேதி மீனாட்சி தேனியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றுள்ளார்.
அப்போது கரூர் கம்பெனி மேடு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மலைத் தேனீக்கள் மீனாட்சியை உடல் முழுவதும் கொட்டி உள்ளது. இதனால் மீனாட்சி அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் மீனாட்சியை முதலுதவி சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்