search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட பட்டாலியன் போலீஸ்காரர் கைது

    பொள்ளாச்சி அருகே மனைவியிடம் கூடதல் வரதட்சணை கேட்ட பட்டாலியன் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 4-வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.

    இவரும் கோவை வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த கீர்த்தனா (23) என்பவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ஜெயகுமார் தனது மனைவியிடம் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மனைவி, குழந்தையை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து கீர்த்தனா மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியன் ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×