search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஈவிகேஎஸ் இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும்- ராஜேந்திர பாலாஜி பேட்டி

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மருத்துவக்கல்லூரிக்காக 24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெறும். மருத்துவக் கல்லூரி பணிகள் ஓராண்டுக்குள் முடியும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும், முதல்வரை பற்றி தவறாக பேசி வருகிறார்.

    ஈவிகேஎஸ்

    நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டி கவுரவித்தது அ.தி.முக. அரசு தான். இந்த விவரங்களை அறியாமல் அவர் பேசக்கூடாது.

    நடிகர்கள் ரஜினி, கமல் அவர்களது பணியை மட்டும் செய்ய வேண்டும். நான் ரஜினி ரசிகன். அவர் படங்களை விருப்பி பார்ப்பேன்.

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறளுடன் திருவள்ளுவர் படம் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வப்போது பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் குறள்கள் மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×