search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணை நீர்மட்டம் 5 நாளில் 5 அடி சரிவு

    வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் கடந்த 5 நாளில் 5 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
    கூடலூர்:

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக நிரம்பியதை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், தற்போது மழை நின்று விட்ட காரணத்தினாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கடந்த 9-ந் தேதி வைகை அணை நீர் மட்டம் 65.32 அடியாக இருந்தது. வரத்து 1767 கன அடியாகவும், திறப்பு 1190 கன அடியாகவும் இருப்பு 4702 மி.கன அடியாகவும் இருந்தது. ஆனால் இன்று அணையின் நீர் மட்டம் 60.53 அடியாக குறைந்துள்ளது. வரத்து 1401 கன அடியாகவும், திறப்பு 4090 கன அடியாகவும் இருப்பு 3705 மி.கன அடியாகவும் உள்ளது.

    கடந்த 5 நாளில் வைகை அணையின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதோடு நீர் இருப்பும் 1000 மி.கன அடி குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மதுரை மாநகர குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. வரத்து 1305 கன அடி. திறப்பு 1490 கன அடி. இருப்பு 3964 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.50 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 425.14 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.37 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100.17 மி.கன அடி.

    Next Story
    ×