search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    புதுக்கடை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

    புதுக்கடை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    புதுக்கடையை அடுத்த அனந்தமங்கலம் பகுதிய சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஜலஜா குமாரி (வயது 55). இவர் சம்பவத்தன்று வீட்டில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஜலஜா குமாரியிடம் பேச்சுக்கொடுத்தார். திடீரென அந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார்.  அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அவர்கள் வருதற்குள் அந்த வாலிபர் அவரது கையை தட்டிவிட்டுவிட்டு கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர ஜஸ்டின் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். மேலும் ஜலஜா குமாரி கூறிய அடையாளங்களை கொண்டு போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் உள்ளதா? எனவும் பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×