என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Byமாலை மலர்13 Nov 2019 10:58 AM GMT (Updated: 13 Nov 2019 10:58 AM GMT)
தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.
பாகூர்:
தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தடையை மீறி அப்பகுதியை சேர்ந்த கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகள் வந்தது. உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தப்பி ஓடியவர்கள் சோரியாங் குப்பம் பகுதியை சேர்ந்த தனபால் (வயது 49), மாணிக்கம் (50) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஒடியவர்களை தேடி வருகின்றனர்.
தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தடையை மீறி அப்பகுதியை சேர்ந்த கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகள் வந்தது. உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தப்பி ஓடியவர்கள் சோரியாங் குப்பம் பகுதியை சேர்ந்த தனபால் (வயது 49), மாணிக்கம் (50) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஒடியவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X