search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.
    பாகூர்:

    தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தடையை மீறி அப்பகுதியை சேர்ந்த கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகள் வந்தது. உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தப்பி ஓடியவர்கள் சோரியாங் குப்பம் பகுதியை சேர்ந்த தனபால் (வயது 49), மாணிக்கம் (50) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஒடியவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×