search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15-ந்தேதி நடக்கிறது

    மதுரையில் வருகிற 15-ந்தேதி காலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    மதுரை:

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் மாற்றத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியார் முன்னணி நிவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞர்களின் கல்வித் தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நடுநர்கள் கலந்து கெண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். முகாமில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×