என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு வந்த மூதாட்டி பஸ் மோதி பலி
Byமாலை மலர்13 Nov 2019 9:44 AM GMT (Updated: 13 Nov 2019 9:44 AM GMT)
தஞ்சை அருகே முதியோர் உதவித்தொகை எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற மூதாட்டி பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வி (வயது60). இவருக்கு பிள்ளைகள் இல்லாததால் வயதான அவருடைய தந்தை அடைக் கலசாமியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஆரோக்கியசெல்வி முதியோர் உதவி தொகை பெற்று வந்துள்ளார். நேற்று மதியம் தஞ்சை கள்ளப்பெரம்பூர் சாலை மேலவெளியில் உள்ள ஒரு வங்கியில் வரவாகி உள்ள முதியோர் உதவி தொகை பணத்தை எடுப்பதற்காக வடக்கு வாசலில் இருந்து நடந்து வந்தார்.
அப்போது ஆரோக்கிய செல்வி மேலவெளியில் உள்ள வங்கி அருகே சாலையில் நடந்து வந்த போது தஞ்சையில் இருந்து ரெட்டிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பஸ் அவர் மீது வேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வி (வயது60). இவருக்கு பிள்ளைகள் இல்லாததால் வயதான அவருடைய தந்தை அடைக் கலசாமியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஆரோக்கியசெல்வி முதியோர் உதவி தொகை பெற்று வந்துள்ளார். நேற்று மதியம் தஞ்சை கள்ளப்பெரம்பூர் சாலை மேலவெளியில் உள்ள ஒரு வங்கியில் வரவாகி உள்ள முதியோர் உதவி தொகை பணத்தை எடுப்பதற்காக வடக்கு வாசலில் இருந்து நடந்து வந்தார்.
அப்போது ஆரோக்கிய செல்வி மேலவெளியில் உள்ள வங்கி அருகே சாலையில் நடந்து வந்த போது தஞ்சையில் இருந்து ரெட்டிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பஸ் அவர் மீது வேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X