search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    முத்துப்பேட்டை அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவி பலி

    முத்துப்பேட்டை அருகே டிராக்டர் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் தொடர்பாக எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செருபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சக்தி பிரியா (வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி சக்திபிரியா, கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டு அருகே நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் திடீரென சிறுமி சக்தி பிரியா மீது மோதியது. இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் ஜானை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×