search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு 11 வயது சிறுமி பலி

    மதுரையில் 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.
    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மகள் தியாசினி (வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். கடந்த 3 நாட்களாக சிறுமி தியாசினி காய்ச்சலால் அவதிப்பட்டாள். காய்ச்சல் குணமாக ஓமியோபதி சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி தியாசினி பரிதாபமாக இறந்தாள்.

    மதுரை மாவட்டத்தில் 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 148 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×