என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆத்தூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28). கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (28). சம்பவத்தன்று சரவணன் அங்குள்ள சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் மது போதையில் திடீரென தகாத வார்த்தையால் திட்டினார். இதை சரவணன் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சரவணனை கத்தியால் குத்தினார். காயமடைந்த சரவணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர் சித்தையன் கோட்டை பகுதியில் போலி மதுபானம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை குடிப்பவர்கள் அதிக போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலி மதுபானத்தால் உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே இதை அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் நடைபெறும் முன் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்