search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கடையம் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருட்டு

    கடையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டர்களில் 3 பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மாதாபுரத்தை சேர்ந்தவர் கடாச்சரவேல்(வயது 53). இவர் அப்பகுதியில் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ளவர்களிடமும் மாத வாடகைக்கு டிராக்டர்களை வாங்கி தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந்தேதி தனது வீட்டின் முன்பு கடாச்சரவேல் 3 டிராக்டர்களை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை டிராக்டரை சென்று பார்த்தபோது அதில் இருந்த 3 பேட்டரிகளும் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடாச்சரவேல் கடையம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×