என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண மண்டபத்தில் மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்
Byமாலை மலர்12 Nov 2019 1:26 PM GMT (Updated: 12 Nov 2019 1:26 PM GMT)
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஒன்னல்வாடியை சேர்ந்தவர் மோனிகா (வயது 23). அதேபகுதியை சேர்ந்தவர் எட்வின் பிரியன் (வயது 27). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இருவீட்டார் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மோனிகாவிற்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி, மோனிகாவுக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை திடீரென மணப்பெண் மோனிகா மாயமானார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மோனிகாவும், எட்வின் பிரியனும் ஓசூரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணப்பெண் காதல் கணவருடன் ஓசூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்புகேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X