search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க.வினர் ஆலோசனை கூட்டம்

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    கரூர்:

    கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேலு கலந்து கொண்டு போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் தலைமையின் ஆணைக்கிணங்க விருப்பமனுக்கள் பெறப்படும் என உறுதி அளித்தார். இதில் கரூர் நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயகுமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    அதை தொடர்ந்து சமீபத் தில் நியமனம் செய்யப்பட்ட கட்சியின்  மாவட்டபொருளாளர் கஸ்தூரி  தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரெங்கநாதன், கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராமானூர் வி. பாலசுப்பிரமணியம்,  கடவூர் ஒன்றியசெயலாளர் வி.நாக ராஜன் ஆகியோருக்கு கட்சி யின் நியமன சான்றிதனை வழங்கி பேசினார். அப்போது புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கே.வி. தங்கவேலு கேட்டுக் கொண்டார்.
    Next Story
    ×